என்றைக்குமானவர்கள்...
சிறுவர்களின் உலகம் தான்
இந்த பூமிக்கான சொர்க்கம் என்பேன்.
போட்டியோ, பொறாமையோ,
சண்டையோ, சச்சரவோ,
அழுகையோ, ஆர்ப்பாட்டமோ என யாவும்
வினாடியில் கரைந்து விடுகிறது அவர்கள் பறிமாறிக் கொள்ளும் சிரிப்பினில்.
பெரியவர்களை சட்டென அவர்கள் உலகிலிருந்து வெளியேற்றி விடும் அரசியலும் அறிந்தவர்கள்.