Tuesday, April 16, 2019


             இன்னொரு உலகம்...


இந்த வெக்கையிலும்,
இந்த அனல்காற்றிலும்
எங்கோ தூரத்தில் கேட்கும்
குருவிகளின் ஓசை,
தாகத்திற்கு தண்ணீராய் மனம்
உன் நினைவுகளை அள்ளி பருகுகிறது.
கிளைகளிலிருந்து உதிரும் இலைகள்
போல மனம் உதிர்ந்து வட்டமடிக்கிறது.
உலகம் எத்திசையிலோ இயங்க,
மெளனத்தில் மேழெழும்புகிறது
நமக்கான உலகம்.

         கடவுளெனும் வேட்பாளர்...



தினம் தினம் புதுப்புது அவதாரங்களில்
கடவுளைப் போலவே வேட்பாளர்களும்
எங்களிடம் வந்தபடியே தான் இருக்கிறார்கள்,,,,
எங்கள் கோரிக்கைகளையும், வேண்டுகோள்களையும் பிரார்த்தகைகளைப் போலவே அவர்களிடம் முன்வைத்தோம்,,,,
முடிவில் கடவுளைப் போலவே அவர்களும்
மிகவும் இன்முகத்துடன் விடை பெற்றனர்...