Wednesday, October 31, 2018


           அன்பை யாசித்தல்....


யாவும் இழந்து,
யாவரும் பிரிந்து,
கர்வம் அழிந்து,
ஞானம் பிறந்து,
ஆற்றல் வற்றி,
அகந்தை குறைந்து

நிறகதியாய் நிற்கும்
கடவுளின் கதி வந்தடைகிறது,
மாமழையாய் பொழியும் ஒரு துளி
அன்பை வேண்டி நிற்கையில்....

Wednesday, October 3, 2018


                  நாளைக்கானவை....



காலண்டரில் தேதி கிழிபட கிழிபட இறக்கும் இறந்த காலங்கள் கனவுகளாய் உருமாறி எதிர்காலத்தில் படிந்து விடுகிறது. நாளைக்கான நம் பெரும்பாலான தேவைகளை நம் இறந்த காலங்களே தீர்மானிக்கின்றன. கனவெல்லாம் இன்றைய காலகட்டத்தில் காணவேண்டியதில்லை, நாம் வளர்வது எப்படி இயல்போ அதைப்போலவே நம் தேவைகளோடு அதுவும் சேர்ந்து கொள்கிறது.