Showing posts with label நாட்ல. Show all posts
Showing posts with label நாட்ல. Show all posts

Tuesday, February 27, 2018


                    உதிரும் உயிர்கள்


நாம் யார் எதற்காக பிறந்தோம் என
நினைக்கும் வயது வருவதற்குள்ளாகவே
கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள்.
உடலை துளைக்கும் தோட்டா அளவிற்கு தான் இந்த பூமியில் சிரியா எனும் இப்படுகொலைகள் நிகழும் நகரமாய் ஒரு நரகம் இருக்கிறது.
கொலை செய்ய பணிக்கப்படுகிறவனும்,
கொலை உண்டு இறப்பவனும் என எல்லோரும் பசியோடும், பயத்தோடும் தன் உறவுகளையும், எதிர்கால வாழ்வையும் தேடி ஏழு வருடங்களாக அலைகிறார்கள்.
மனிதம், அன்பு, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் என யாவும் இதுபோன்ற தருணங்களில் நம்முன்னே கேள்விக்குறிகளாய் இருக்கின்றன.