Monday, February 27, 2012

மெகா ட்விட்-அப் அழைப்பு....

இது ட்விட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் பதிவர்களுக்கான பதிவு. இந்த மெகா ட்விட்டப்பில் கழந்து கொள்ளும் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் தான். உங்களின் கருத்துக்களையும், திறமைகளையும் வெளிக்கொணரத் தான் இந்த ஏற்பாடு. அவசியம் கலந்து கொண்டு இந்த வெளிச்சத்தில் உங்களை இந்த உலகிற்கு காட்டிக் கொள்ளுங்கள். நகைச்சுவை மிளிர இந்த அழைப்பு பதிவை எழுதிக் கொடுத்த நண்பர் ராஜன் லீக்ஸுக்கு TNmegatweetup என்றும் கடமைப்பட்டுள்ளது.
ஏப்ரல்-30ம் தேதிக்குள் கலந்து கொள்ள விரும்பும் அனைவரும் chennaitweetup@gmail.com என்ற முகவரியில் உங்கள் Twitter handle குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளவும்.
விழா நடைபெறும் தேதி : 13-05-2012
நடைபெறும் இடமும், நேரமும் ஏப்ரல்-30ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும்.

R u want to know Mega tweetup updates plz follow our twitter handle : www.twitter.com/TNmegatweetup


@

டுவிட்டரப்பன் துணை

#Chennai Mega TweetUp

தமிழ் கூறும் நல்லுலகின் டுவிட்டர் சந்து/சமுதாய மக்கள் அனைவரையும் ஒரு குடைக்கீழ் கொணருமோர் பெருமுயற்சியாய் சென்னை மெகா ட்வீட் அப் 13-05-2012




இணையத்தின் மற்றெந்த சந்துகளையும் விட டுவிட்டர் சந்தில் நமது மக்களின் அளவளாவல் அடா, புடா ரேஞ்சில் மானாவாரியாக பொங்கி ஓடும் சமயத்தில், இயன்றவரை, எல்லாரையும் ஓரிடத்தில் சந்திக்கவைப்பது என்று முடிவு! மக்களனைவரும் குடும்பத்துடன் புளிசோறு கட்டிக் கொண்டு கிளம்பி வரலாம்! பொடுசுகளைத் தூக்கி வருவோர் பேம்ப்பர்ஸ் சொந்த செலவில் கொண்டு வரவேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தெருக்கள்தொறும் புண்ணியாத்மாக்களாய் உலவுவதால் கரண்ட் கட் எனும் கடுஞ்சாபமின்றி உய்யும் சென்னை மாநகரில் மேற்படி நிகழ்வை நடாத்துவதில்(!) புழுங்கிச் சாவும் பிறமாவட்ட மக்கள் நாங்கள் களிபேருவகை கொள்கிறோம்!


இதுவரை தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில், ரெஸ்டாரண்டுகள், உயர்தர ஜைவ உணவகங்கள், சோம்பேறி பார்க்குகள், புத்தக்க் கண்காட்சிகள், பச்சை போர்டு டாஸ்மாக்குகள், பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பிய வீடுகள் என சிறிய அளவில் டுவீட் அப்புகள் வெகுசிறப்பாக நடந்தேறியிருக்கலாம், ஆனால் இம்முறை வங்கக் கடலோரம் சிங்கத்தமிழரை அலைகடலென பெருந்திரளாய் ஒன்றிணைத்து, 2016 சட்டசபை தேர்தல் ரேசில் நாமும் இருக்கிறோம் என்பதனை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மட்டுமல்லாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


வழமை போல், சப்பைக் காரணங்கள் சொல்லி ஜகா வாங்கும் அப்பாட்டக்கர்கள் இம்முறையாவது திருமுகரையை வந்து காட்டிப் போகப் பிரையாசைப்பட்டே 2 மாதங்கள் முன்னதாகவே அறிவிப்பை வெளியிடுகிறோம்.

ட்வீட் அப் நடக்கும் ஞாயிற்றுக்கிழமை கூட, டேமேஜர் கூப்பிட்டார், ஹோம் மினிஸ்டர் திட்டும்னு கூவறவங்க எல்லாம் அன்றைய தினம் தாத்தா பாட்டிகளைப் போட்டுத்தள்ளவோ, சுளுக்கு, பேதிகளால் பீடிக்கப்படவோ ஆயத்தமாவீர்களாக.


12 வருசம் முந்தி எடுத்த படங்களை டிபியில் வைத்துக் கொண்டு ஸ்டடி லீவில் இருப்பதாக ஸ்டேடஸ் போடும் பெர்சுகள், பாப்பா போட்டோ பூ போட்டோ போட்டிருக்கும் பாட்டிகள் என பலரையும் கண்டு களிக்க ஒரு அற்புதமான வாய்ப்பு!


பதிவினைத் தந்தி போல் பாவித்து, கிளம்பத்தயாராகவும்! சனிக்கிழமை இரவே அவரவர் ஊர் காய்கறி மார்க்கெட்டிலிருந்து புறப்படும் உருளைக்கிழங்கு லோடு லாரிகளில் முன்பதிவு செய்து கொள்வீர்.


குடிவெறியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்: சந்திப்பின் போது மட்டும் சாராயம் தவிர்ப்பீராக! போதையில் வரும் நபர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


சென்னை மெகா ட்விட் அப்பில் கலந்துகொள்ள உள்ளோர் தத்தமது டுவிட்டர் ஹேண்டில் உள்ளிட்ட விபரங்களுடன் chennaitweetup@gmail.com என்ற முகவரிக்கு மின்மடலிட்டு வருகையை உறுதி செய்யவும்.


எண்ணிக்கையை உத்தேசித்து, விரைவில் சென்னையில் நிகழ்வு நடைபெறும் அரங்கம் குறித்த விபரங்கள் வெளியாகும்.


மேலும் தகவல்களுக்கு டைம்லைனில் பதிலளிக்கக் காத்திருக்கிறோம்!


- அன்பின் ராஜன்!


ஸ்பான்ஸர்ஸ்:









அன்பின் ராஜன் இராதாமணாளன்.,

Wednesday, October 12, 2011

அன்பின் அடையாளம்.

18-09-2011 ஞாயிறு அன்று என் வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நம் யாவருக்கும் மணவாழ்வு என்பது மறக்க முடியாத தருணங்களில் ஒன்று. அந்த நாளில் தான் நம் சொந்தங்களும், நண்பர்களும் நம்மை கடவுளை போல பாவித்து நம்மை அலங்கரித்து, நம்மை உபசரித்து ஒரு கோலாகலமான திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.
அதுபோன்றதொரு அற்புதமான நேரத்தில் தான் முகமறியாத அந்த முகங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத சந்தோசத்தையும், அனுபவத்தையும் எனக்களித்தனர். அவர்கள் என் ட்விட்டுலக நண்பர்கள் கார்க்கி, பரிசல், வேதாளம், கேசவன், குள்ளபுஜ்ஜி. நேரில் சென்று அழைப்பு கொடுத்து வரவேற்கும் சராசரி உபசரிப்பைக் கூட அவர்களுக்கு நான் அளிக்கவில்லை. போனில் தொடர்பு கொண்டது மட்டும் தான். பரிசல் திருப்பூரில் இருந்து வந்திருந்தார். மற்ற நண்பர்கள் சென்னையிலிருந்து வந்திருந்தனர். என் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர்களைப் பார்த்த வினாடி எனக்கு பதற்றமே தொற்றிக் கொண்டது. கூட்ட நெரிசலில் அவர்கள் மெதுவாக மேடைக்கு
என்னை வந்தடைந்த சில வினாடிகளிலேயே எங்கள் சந்திப்பு முடிந்து விட்டது. எனக்காக அவர்களின் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு நாள் முழுவதும் பயணம் செய்து என்னை சந்தித்தவர்களிடம் தனியாக இரண்டு நிமிடம் பேசக்கூட அவகாசம் கிடைக்கவில்லை. அந்த வருத்தம் இப்போதும் என்னை வருத்திக் கொண்டிருக்கிறது. இவர்கள் இப்போது எனக்கு ஏதோ உறவினர்கள் நெருக்கமான நண்பர்களாகி விட்ட உணர்வே ஏற்படுகிறது.
நேற்று கூட பரிசல் அண்ணனிடம் உரிமையோடு எனக்கான உதவிகளை தயங்காமல் கேட்டுப் பெற்றுக் கொண்டது இந்த உறவு முறையால் தான். நன்றி என்ற ஒற்றை சொல்லில் இவர்களின் நட்பை நான் ஈடுகட்டி விட முடியுமா என்ன???

இடமிருந்து வலம் : கார்க்கி, பரிசல், வேதாளம்@அர்ஜூன், கேசவன், குள்ளபுஜ்ஜி.


மணப்பெண்ணும், நானும்.



மணப்பெண்ணின் அம்மா, அப்பாவுடன்....


என் அம்மா, அப்பாவுடன்...


திரு. கே.ஈ. கிருஷ்ணமூர்த்தி, M.L.A. அவர்கள் (பருகூர் தொகுதி)


திரு. கே.பி. அன்பழகன் M.L.A. அவர்கள் (பாலக்கோடு தொகுதி)


திருமதி. மனோரஞ்சிதம் நாகராஜ், M.L.A அவர்கள் (ஊத்தங்கரை தொகுதி)

Tuesday, September 6, 2011

அன்புடன் அழைக்கிறேன்...

ஏறக்குறைய 15 வருடமாக வாசிக்கும் பழக்கம் இருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்து தான் இணைய எழுத்தின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. ஆயிரக்கணக்கான பதிவர்களும், ட்விட்டர்களும் மலை போல குவிந்திருக்க அதில் நானும் ஒரு எறும்பாக ஊர்ந்து கொண்டிருப்பதை பெருமையாகவே கருதுகிறேன்.
ஒரு வாசகனாக நான் இருக்கும் போது தினம்தினம் அனுபவத்தின் வெவ்வேறு விதமான வாசல்களை படைப்பாளியின் படைப்புகள் எனக்காக திறந்து கொண்டேயிருக்கின்றன. தீவிரமாக இயங்கும் ஒரு படைப்பாளி தான் அடையும் அவன் அடையும் கனவுகளை, ஆசைகளை, விருப்பு வெறுப்புகளை என யாவற்றையும் எழுத்தின் மூலமே கடக்க முயல்கிறான். தன் சுகதுக்கங்களை சுமந்தலையும் படைப்பை தாங்கிக் கொள்ள அவனுக்கு வாசகன் முக்கிய தேவையாக இருக்கிறான்.
ஆக குடும்ப அமைப்பு, உறவு முறைகளை விட தனித்துவமானதொரு பிணைப்பு கொண்டது தான் எழுத்தாளன் - வாசகன் எனும் உறவுமுறை. என்னைப் பொறுத்தவரை படைப்பதை விட படிப்பதில் தான் அலாதி சுகம். அதற்கு காரணங்கள் பல. இந்த உறவுமுறை தனித்துவமானது. அது பொன்னையோ, பொருளையோ எதிர்பார்க்காதது. வெறும் பகிர்தலை மட்டுமே கொண்டது. இந்த உறவு முறையில் மட்டுமே நமக்கு ஏமாற்றமற்ற வாழ்பனுபவம் கிடைக்கிறது. அந்த உறவு முறையை வலுவாக்கவும், புதுப்பிக்கவும் எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

ஆம் வருகிற 18-09-2011 அன்று எனக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. (அழைப்பிதழ் பதிவின் கடைசியில்) முகமறியா உங்களின் எல்லோரின் அறிமுகங்களையும், ஆசிகளையும் எதிபார்க்கிறேன். இந்த அழைப்பை பதிவுக் கூட்டத்திலோ அல்லது ட்விட்டப்பிலோ முறைப்படி கொடுப்பதற்கான கால அவகாசம் இல்லாத காரணத்தால் பதிவிட்டு உங்களை அழைக்க வேண்டிய சூழ்நிலை. இந்த அழைப்பை நேரில் வைத்த அழைப்பாக ஏற்றுக் கொண்டு
தங்களின் வருகையையும், ஆசியையும் வேண்டுகிறேன். பயணம் குறித்த விபரங்களுக்கு எந்த நேரமும் என் அலைபேசி எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம்.

Shree Venkatachalapthi Namah
Devarajan & Kousalya Devarajan
( Sathish Medicals, Kalpana Complex – Uthangarai )


Request the pleasure of the company of
at the Wedding Reception of their beloved Son
D. Sathish Babu B.B.A., D.Pharm.,
( Sathish Medicals, Uthangarai )
to
E. Nithya M.C.A.,
Daughter of Sri. Elangovan & Kamatchi Elangovan


To be held on Sunday, 18th September 2011
between 11.30 AM and 2.30 PM
at
SVT Kalyana Mahal,
Uthangarai – 635 207
Krishnagiri Dist