Thursday, February 3, 2011

"ஆட்டிசம்" என்றொரு ஆபத்து...


தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடம் பழகும் திறன் குறைவாக இருப்பதும், அதிகமான கவனக் குறைவு போன்ற குறைபாடுகளை "ஆட்டிசம்" (AUTISM)என்கின்றனர்.
பெரும்பாலும் இந்த நோய் நான்கு வயதிற்குள் இருக்கும் குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. பிறந்ததிலிருந்து பள்ளி செல்லும் வரை அம்மாவின் பராமரிப்பிலேயே வளரும் குழந்தைகளுக்கு நவின உலகின் மனிதர்களும், அவர்களைச் சார்ந்த பேரியக்கங்களும் சற்று அதிர்ச்சியைத் தரும். அவர்களுக்கு இந்த அவசரகதி உலகம் புரிபடாமல் அம்மாவின் உலகிலேயே சார்ந்து வாழும் எண்ணம் வலுக்கிறது. அதில் சில குழந்தைகள் தடுமாறி ஆட்டிசத்திற்கு ஆளாகின்றன. இதை கவனிக்காமல் விட்டு விட்டால் குழந்தையின் உடல் மெலிந்து , மனம் சிதறுண்டு உயிருக்கே ஆபத்தான நிலைக்கு சென்று விடும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டிசத்திற்கு ஒரு "ஸ்டெல்த் வைரஸ்" இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் இதயத்திலிருந்து வயிற்றுக்கு வந்து மூளையை பாதிக்கிறதாம்.
சமிபத்தில் கலிபோர்னியாவில் சுமார் 5லட்சம் குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒரு குழந்தைக்குப் பின் குறுகிய இடைவெளியில் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கு "ஆட்டிசம்" பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முதல் குழந்தை பிறந்து, குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்குள் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிச பாதிப்பு அதிகம் இருப்பதாக நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர் பீட்டர் பியர்மான் கூறுகிறார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வகை குழந்தைகளுக்காக "தோஸ்த்" என்ற காப்பகம் சென்னை கெல்லிஸில் ஆரம்பிக்கப்பட்டது. அந்தக் காப்பகம் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறதா??? தெரியவில்லை.

--------------------------------------------------------------------------------------------


சமீபத்தில் நான் ரசித்த குறுஞ்செய்தி :
கருணாநிதி அந்தப் பள்ளிக்கு பார்வையிடுவதற்காக செல்கிறார்.
முதல்வர் :
மாணவர்களே, என்னிடம் ஏதாவது கேள்வி கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்.
லிட்டில் கபீர்:
ஐயா, எனக்கு உங்களிடம் கேட்க இரண்டு கேள்விகள் இருக்கிறது.
1) ஸ்பெக்ட்ரம் ஊழலில் உங்களுக்கான பங்கு எவ்வளவு?
2) அந்தப் பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது?
முதல்வர் :
புத்திசாலி மாணவன். (சற்று யோசித்து விட்டு)
நாம் சிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் சந்திப்போம்.
இடைவேளைக்குப் பின்பு...
முதல்வர் : சரி மாணவர்களே, நாம் எந்த இடத்தில் நிறுத்தினோம்?
ஆங்... மாணவர்களே என்னிடம் ஏதாவது கேள்வி கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்.
லிட்டில் ஜானி:
ஐயா, எனக்கு உங்களிடம் கேட்க மூன்று கேள்விகள் இருக்கிறது.
1) ஸ்பெக்ட்ரம் ஊழலில் உங்களுக்கான பங்கு எவ்வளவு?
2) அந்தப் பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது?
3) எங்கே என் நண்பன் கபீர்?

No comments:

Post a Comment