Tuesday, April 16, 2019


             இன்னொரு உலகம்...


இந்த வெக்கையிலும்,
இந்த அனல்காற்றிலும்
எங்கோ தூரத்தில் கேட்கும்
குருவிகளின் ஓசை,
தாகத்திற்கு தண்ணீராய் மனம்
உன் நினைவுகளை அள்ளி பருகுகிறது.
கிளைகளிலிருந்து உதிரும் இலைகள்
போல மனம் உதிர்ந்து வட்டமடிக்கிறது.
உலகம் எத்திசையிலோ இயங்க,
மெளனத்தில் மேழெழும்புகிறது
நமக்கான உலகம்.

No comments:

Post a Comment