Friday, February 8, 2019


       எல்லோருக்குமான உலகம்...



எதற்குமே தகுதியில்லாதவனின்
வெற்றி எனக்கு பிடித்திருக்கிறது,
அன்பைக் ஆராதிப்பவனின்
இழப்பு எனக்கு பிடித்திருக்கிறது,
கர்வம் கற்று தேர்ந்தவனின்
கலகம் எனக்கு பிடித்திருக்கிறது,
கோபம் கொண்டாடுபவனின்
கண்ணீர் எனக்கு பிடித்திருக்கிறது.
எல்லோருக்குமானதாக இருக்கும் இந்த
உலகம் எனக்கு பிடித்திருக்கிறது.

Thursday, February 7, 2019


                  மிதக்கும் கவிதை...


 உயிர் மெய் எழுத்துக்கள் எறும்பாய்
உடலில் ஊர்ந்து கொண்டிருக்க,
ஒவ்வொன்றையும் லாவகமாக பிடித்து
மலர் தொடுப்பதைப் போல
அழகாய் கவிதை செய்து விடுகிறாய்.
கவிதை தீராது,வார்த்தைகள் தீர்ந்து போக இரவு வரை காத்திருந்து நட்சத்திரங்களை
பிடிக்கத் தொடங்கியிருந்தாய்....

Tuesday, January 8, 2019


            என்றைக்குமானவர்கள்...



சிறுவர்களின் உலகம் தான்
இந்த பூமிக்கான சொர்க்கம் என்பேன்.
போட்டியோ, பொறாமையோ,
சண்டையோ, சச்சரவோ,
அழுகையோ, ஆர்ப்பாட்டமோ என யாவும்
வினாடியில் கரைந்து விடுகிறது அவர்கள் பறிமாறிக் கொள்ளும் சிரிப்பினில்.
பெரியவர்களை சட்டென அவர்கள் உலகிலிருந்து வெளியேற்றி விடும் அரசியலும் அறிந்தவர்கள்.