Sunday, September 30, 2018


நீர் உலகம்...


 
" டாடி இந்தா " என மகன் நீட்டிய ஒரு சொம்பு தண்ணீரில் என் முகம் பார்த்தேன். அலையலையாய், கலங்கலாய் பாதியழிந்த உருவமாய் என் முகம் அதில் காட்சியளித்தது.
எதிர்படும் யாவையும் அவன் சேமிக்கும் அன்பைப் போல அது சேகரித்துக் கொண்டே இருந்தது. அந்தக் கணம் அன்பைப் பெறுவதும், கொடுப்பதுமான பாடத்தை உலகம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது.

Wednesday, September 26, 2018


                கட்டளைப் பருவம்....



வீட்டில் :
சீக்கிரம் எழு,
சட்டுனு குளி,
பட்டுனு சாப்பிடு,
வேகமா நட,
பத்திரமா பஸ் ஏறு,
பள்ளியில் :
விளையாடாம படி,
மனப்பாடம் பண்ணு,
அழகா எழுது,
மறுபடியும் வீட்டில் :
பட்டுனு சாப்பிடு,
சீக்கிரம் தூங்கு
வளரும் குழந்தைகளின் நிகழ்காலங்கள்
நம் கட்டளைகளால் கட்டமைக்கப்படுகின்றன 😌😢😫🤯

Monday, September 24, 2018


          உலகம் தரும் உன்னதம்....



வாழ்வே வெறுப்பாய்,
வாழ்தலே அசிங்கமாய்,
மனிதர்களே மிருகங்களாய்,
எதிலும் பற்றற்று,
எங்கும் சலிப்புற்று,
எப்போதும் விவேகமற்று,
மனமே கணமாய்,
ஆசையே பாரமாய்,
தோல்வியே துணையாய்
என பசியோடு தனித்திருக்கையில் இந்த உலகம் யாவையும் கொடுத்து
விடுகிறது.