Friday, December 28, 2018


                        அன்பினால்....



வார்த்தைகள் மெளனம் காக்கும்,
உணர்ச்சிகள் உயிரற்று போகும்,
உணர்வுகள் பெருக்கெடுத்து ஓடும்,
காலங்கள் கசப்பானவை ஆகும்,
கணங்கள் கண்ணீராக கரையும்,
பிரியங்கள் பிண்ணிப் பிணையும்,
அன்பின் ஆறுதலையும், அவசியத்தையும்
உணரவாவது வேண்டும்
உனக்கும், எனக்குமான பிரிவென்பது....

Sunday, December 23, 2018


             முதன்மையானவன்....


எக்காலத்திற்கும், எப்போதும் இவன் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும். மனிதமும், நேசமும், தன் உழைப்புமே தன்மானம், வாழ்வின் அடையாளம், அர்த்தம் என போதித்த ஆசானுக்கு வீரவணக்கம் 🙏🙏🙏

Saturday, December 22, 2018


               நமக்கானவைகள்....



என்னைப் பற்றிய உண்மைகள் உங்களுக்கு எப்போதும் கசப்பையே ஏற்படுத்துகின்றன.
திசைகள் என்ற ஒற்றைப் புள்ளியில் இருந்து நான்காய் பிரிபவர்கள் நாம்,
இயற்கையில் நீங்கள் வேண்டுமானால் மாமழையாய் பொழியலாம்.
நமக்கான உடைந்த வார்த்தைகளை
உங்கள் பெருமழையோடு ஏற்கும் பூமியாய்
நமக்கான நல் இறந்த காலங்கள்.