Tuesday, September 6, 2011

அன்புடன் அழைக்கிறேன்...

ஏறக்குறைய 15 வருடமாக வாசிக்கும் பழக்கம் இருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்து தான் இணைய எழுத்தின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. ஆயிரக்கணக்கான பதிவர்களும், ட்விட்டர்களும் மலை போல குவிந்திருக்க அதில் நானும் ஒரு எறும்பாக ஊர்ந்து கொண்டிருப்பதை பெருமையாகவே கருதுகிறேன்.
ஒரு வாசகனாக நான் இருக்கும் போது தினம்தினம் அனுபவத்தின் வெவ்வேறு விதமான வாசல்களை படைப்பாளியின் படைப்புகள் எனக்காக திறந்து கொண்டேயிருக்கின்றன. தீவிரமாக இயங்கும் ஒரு படைப்பாளி தான் அடையும் அவன் அடையும் கனவுகளை, ஆசைகளை, விருப்பு வெறுப்புகளை என யாவற்றையும் எழுத்தின் மூலமே கடக்க முயல்கிறான். தன் சுகதுக்கங்களை சுமந்தலையும் படைப்பை தாங்கிக் கொள்ள அவனுக்கு வாசகன் முக்கிய தேவையாக இருக்கிறான்.
ஆக குடும்ப அமைப்பு, உறவு முறைகளை விட தனித்துவமானதொரு பிணைப்பு கொண்டது தான் எழுத்தாளன் - வாசகன் எனும் உறவுமுறை. என்னைப் பொறுத்தவரை படைப்பதை விட படிப்பதில் தான் அலாதி சுகம். அதற்கு காரணங்கள் பல. இந்த உறவுமுறை தனித்துவமானது. அது பொன்னையோ, பொருளையோ எதிர்பார்க்காதது. வெறும் பகிர்தலை மட்டுமே கொண்டது. இந்த உறவு முறையில் மட்டுமே நமக்கு ஏமாற்றமற்ற வாழ்பனுபவம் கிடைக்கிறது. அந்த உறவு முறையை வலுவாக்கவும், புதுப்பிக்கவும் எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

ஆம் வருகிற 18-09-2011 அன்று எனக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. (அழைப்பிதழ் பதிவின் கடைசியில்) முகமறியா உங்களின் எல்லோரின் அறிமுகங்களையும், ஆசிகளையும் எதிபார்க்கிறேன். இந்த அழைப்பை பதிவுக் கூட்டத்திலோ அல்லது ட்விட்டப்பிலோ முறைப்படி கொடுப்பதற்கான கால அவகாசம் இல்லாத காரணத்தால் பதிவிட்டு உங்களை அழைக்க வேண்டிய சூழ்நிலை. இந்த அழைப்பை நேரில் வைத்த அழைப்பாக ஏற்றுக் கொண்டு
தங்களின் வருகையையும், ஆசியையும் வேண்டுகிறேன். பயணம் குறித்த விபரங்களுக்கு எந்த நேரமும் என் அலைபேசி எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம்.

Shree Venkatachalapthi Namah
Devarajan & Kousalya Devarajan
( Sathish Medicals, Kalpana Complex – Uthangarai )


Request the pleasure of the company of
at the Wedding Reception of their beloved Son
D. Sathish Babu B.B.A., D.Pharm.,
( Sathish Medicals, Uthangarai )
to
E. Nithya M.C.A.,
Daughter of Sri. Elangovan & Kamatchi Elangovan


To be held on Sunday, 18th September 2011
between 11.30 AM and 2.30 PM
at
SVT Kalyana Mahal,
Uthangarai – 635 207
Krishnagiri Dist

8 comments:

  1. மகிழ்வான செய்தி தோழர்!!

    அவசியம் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்..

    முயற்சிப்பது என்ன..

    கலந்து கொள்கிறேன்!!

    சில நாட்கள் கழித்து தங்களிடம் அலை பேசுகிறேன் தோழர்..

    பிரியங்களும் வாழ்த்துக்களும் எனதன்புகளும்!!

    ReplyDelete
  2. நன்றி முத்து பிரகாஷ். அவசியம் கலந்து கொள்ளுங்கள் தோழர். உங்களின் வரவை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் சகா

    ReplyDelete
  7. அன்பிற்குரிய தோழர்!

    தவிர்க்க முடியாத சூழலால் என்னால் மண விழாவில் கலந்து கொள்ள முடியாததை எண்ணி வருந்துகிறேன்..

    கண்டிப்பாக ஒரு நாள் தங்களை சந்திக்கவில்லையெனில் எனது குற்ற உணர்வுள்ளம் ஆறுதல் கொள்ளாது..

    மனமார்ந்த வாழ்த்துகள் நான் அருகே இல்லைஎன்றாலும், வர முடியாதிருந்த போதிலும்!!

    இந்த இனிய நாளின் மகிழ்ச்சி வெள்ளம் தொடர்ந்து பெருகி வாழ்வில் பொங்கி வழியட்டும்!!

    மீண்டும் எனதன்புகள் தோழமைகள் இருவருக்கும்!!!

    ReplyDelete