Wednesday, April 4, 2018


                     

டாப்-அப் சிறுகதை :
அந்த நெடுஞ்சாலை கண்ணுக்கெட்டிய தூரம்வரை எந்த வளைவும் இல்லாமல் நேர்க்கோட்டில் இருந்தது. செம்மஞ்சள் நிற சூரிய அஸ்தமன வெளிச்சத்தில் மெல்லிய தூரலில் யாவும் நனைந்து கொண்டிருக்க எனக்கு மிக அருகிலேயே கிரிக்கெட் கமெண்ட்ரி இசையாய் அந்த இடத்தின் மெளனத்தை தாலாட்டிக் கொண்டிருந்தது. எல்லாம் சரியாய் அமைந்து தூங்க கண்ணயறும் சமயத்தில் "சார் டிக்கெட் எடுத்துக்கோங்க" என்ற நடத்துனரின் அதிகார தோரணை அத்தனை சந்தர்ப்பங்களையும் கலைத்து போட்டது.

Tuesday, April 3, 2018


                          இது நானல்ல



இது என் எழுத்தல்ல,
இது என் சிந்தனையல்ல,
இது என் மொழியல்ல,
இது என் சிறகல்ல,
இது என்வானமல்ல,
இது என் பூமியல்ல,
இது என் சுவாசமல்ல,
இது என் உணர்வல்ல,
இது என் உயிரல்ல,
என் உடலில் இந்த உலகம்
வாழ்ந்து கொண்டிருக்கிறது.

Sunday, April 1, 2018


                  நமக்கான தூதுவன்


 மதம், அறிவியல் என எல்லாவற்றுக்கும் மேலாக நமக்கும், நம் வாழ்வியலுக்கும் மிக நெருக்கமான சக்தியாக இருப்பது இயேசுவே. அசைவில்லாமல் நம்மை பார்க்கும் அந்த கண்களின் வழியே தான் உயிர் மொத்தத்திற்குமான மனிதத்தையும், சமாதானத்தையும், வழிகாட்டலையும் நமக்குள் கடத்துகிறார். மனிதனாக பிறந்து, இறந்து மீண்டும் மனிதனாகவே இன்றுவரை வாழும் நம் கடவுள் இவர் மட்டுமே. அவரை வாழ்த்துவது, வணங்குவதை விட அவர் போதனைகள் சிலவற்றையாவது இந்த உலகம் கடைபிடிப்பதே இன்றைய அவசியமும், அவர் விரும்புவதும் கூட.