Saturday, March 31, 2018



டாப்-அப் சிறுகதை :
ஈக்களும், கொசுக்களும் மொய்த்திருக்க என் சிறுநீரும், மலமும் அப்பியிருந்த படுக்கை துணியை மிகவும் கவனமாக, லாவகமாக எடுத்து வேறு மாற்றி, எனை கழுவி, துடைத்து பல மாதங்களாக எனைதாங்கும் அவள் பெயர் கூட சட்டென என் நினைவில் தங்குவதில்லை.
"எனக்கே அறுவருப்பா இருக்கு
என்ன கொண்ணுடேன்" என கேட்டவுடன்
வெறித்துப் பார்த்தவள்
"எனக்கு அறுவருப்பா எப்போ தோணுதோ அப்போ உங்கள கொண்ணுடறேன், சரியா என சிரித்தாள். இப்போதே இறந்து இப்படியே அவள் வயிற்றில் பிறந்திட வெளியேறிய கண்ணீர் துடித்தது.

Friday, March 30, 2018


                தனித்துவிடப்பட்ட மனம்


ஒரு சொல்லுக்கு பல விளக்கங்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது,
நியாயம் கற்பிக்க வேண்டியிருக்கிறது,
சமாதானப்படுத்த வேண்டியிருக்கிறது,
தோல்வியுற வேண்டியிருக்கிறது
இவையனைத்தும் மனிதர்களிடம் மட்டுமல்ல, நான் வளர்க்கும் பழுப்புநிற நாய் குட்டியிடமும் கூட.
சட்டென வானில் தொங்கும் நட்சத்திரத்தின் கூட்டில் ஒளிந்து
கொள்ள வேண்டியிருக்கிறது.

Thursday, March 29, 2018


             மனிதம் பேசும் உயிர்கள்



 சக உயிர்களிடத்தில் நாம் கொள்ளும்
நேசமும், கருணையும் மட்டுமே
நமக்கான வாழ்வியலை அழகானதாக, அர்த்தமுள்ளதாக, நிறைவானதாக ஆக்கும்.
பசிக்கு உணவும், உறங்கும் போது பாதுகாப்பையும் நமக்கு அளிப்பவர்களே நமக்கான கடவுள்கள்.
அதை எப்போதும் பிறருக்கு அளித்து நாமும் கடவுளாக மாறுவோம்.