Saturday, March 31, 2018



டாப்-அப் சிறுகதை :
ஈக்களும், கொசுக்களும் மொய்த்திருக்க என் சிறுநீரும், மலமும் அப்பியிருந்த படுக்கை துணியை மிகவும் கவனமாக, லாவகமாக எடுத்து வேறு மாற்றி, எனை கழுவி, துடைத்து பல மாதங்களாக எனைதாங்கும் அவள் பெயர் கூட சட்டென என் நினைவில் தங்குவதில்லை.
"எனக்கே அறுவருப்பா இருக்கு
என்ன கொண்ணுடேன்" என கேட்டவுடன்
வெறித்துப் பார்த்தவள்
"எனக்கு அறுவருப்பா எப்போ தோணுதோ அப்போ உங்கள கொண்ணுடறேன், சரியா என சிரித்தாள். இப்போதே இறந்து இப்படியே அவள் வயிற்றில் பிறந்திட வெளியேறிய கண்ணீர் துடித்தது.

No comments:

Post a Comment