Thursday, August 30, 2018


   
           காலத்தை புதுப்பிப்பவள்....




ஒரு அழுக்கு துணியை எடுப்பதுபோல்
நம் இறந்த காலங்களை எடுக்கிறாய்,
அதில் படிந்திருக்கும் அழுக்கைப் போல்
நம் மனக் கசப்புகளை பார்க்கிறாய்,
சோப்பு நீரில் ஊறும் துணியைப் போல்
அக் கசப்பை கண்ணீரில் நனைக்கிறாய்,
குமுக்கி, அடித்து துவைப்பது போல்
மன்னிப்பால் கசப்புகளை போக்குகிறாய்,
பளிச்சென்று காயும் துணியைப் போல்
நம் காலங்களை புதிதாக்குகிறாய்.

Tuesday, August 28, 2018


         அன்பின் வழித்தடங்கள்...


போதுமென்று எப்போதும் எனக்கு தோன்றியதேயில்லை,
நீ கொடுத்த அன்பு,
நீ கொடுத்த பரிவு,
நீ கொடுத்த தூய்மை,
நீ கொடுத்த நேசம், என
நீ கொடுத்த யாவும்
போதுமென்று எப்போதும் எனக்கு
தோன்றியதேயில்லை,
கொடுக்கும் உன் கரங்களும்
வாங்கும் என் கரங்களும் சோர்ந்திடுமா?
யானறியேன், ஆனால் நம் மனமிரண்டும்
சோர்ந்திடாது.


                 கனவின் மொழி....


பேரமைதியின் உள்ளே தாண்டவமாடிக்
கொண்டிருக்கும் உன் கனவுகளைக் கேள்,
அதன் மொழியைப் புரிந்து கொள்,
அதன் உணர்வைப் புரிந்து கொள்,
அதன் கட்டளையைப் புரிந்து கொள்,
அதன் கட்டமைப்பை புரிந்து கொள்,
அதை ஒருபோதும் உன்னிடம் இருந்து
துண்டித்துக் கொள்ளாதே,
அஃது ஒன்றே நம் வாழ்வியல்.