Thursday, August 30, 2018


   
           காலத்தை புதுப்பிப்பவள்....




ஒரு அழுக்கு துணியை எடுப்பதுபோல்
நம் இறந்த காலங்களை எடுக்கிறாய்,
அதில் படிந்திருக்கும் அழுக்கைப் போல்
நம் மனக் கசப்புகளை பார்க்கிறாய்,
சோப்பு நீரில் ஊறும் துணியைப் போல்
அக் கசப்பை கண்ணீரில் நனைக்கிறாய்,
குமுக்கி, அடித்து துவைப்பது போல்
மன்னிப்பால் கசப்புகளை போக்குகிறாய்,
பளிச்சென்று காயும் துணியைப் போல்
நம் காலங்களை புதிதாக்குகிறாய்.

No comments:

Post a Comment