Tuesday, August 28, 2018


         அன்பின் வழித்தடங்கள்...


போதுமென்று எப்போதும் எனக்கு தோன்றியதேயில்லை,
நீ கொடுத்த அன்பு,
நீ கொடுத்த பரிவு,
நீ கொடுத்த தூய்மை,
நீ கொடுத்த நேசம், என
நீ கொடுத்த யாவும்
போதுமென்று எப்போதும் எனக்கு
தோன்றியதேயில்லை,
கொடுக்கும் உன் கரங்களும்
வாங்கும் என் கரங்களும் சோர்ந்திடுமா?
யானறியேன், ஆனால் நம் மனமிரண்டும்
சோர்ந்திடாது.

No comments:

Post a Comment