Tuesday, September 11, 2018


              கற்றது வாழ்க்கை....



முதல் ஐந்து நாட்கள் அழுது கொண்டே செல்லும் குழந்தை அவளுக்கான பால்யத்தை மீட்டுத் தருகிறான்.
வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பேருந்தில் அவன் கையசைக்கையில் அவளுக்கான பிரியத்தை மீட்டுத் தருகிறான்.
மாலை வீடு திரும்பும் வரை மீதம் சுமந்து வரும் மதிய சாப்பாட்டில் அவளுக்கான இயலாமையை மீட்டுத் தருகிறான்.
அவன் கற்கும் பாடப்புத்தகத்தில் மட்டும் அவள் கற்றுக் கொள்ள எப்போதும் விரும்பியதேயில்லை.

No comments:

Post a Comment