Friday, February 15, 2019


               காட்சிப் பொருள்...


அது விசித்திரமான சந்தை...
ஒரு அழகான பறவை கூடை நிறைய
அதன் இளமையான குரலை சேகரித்து
விற்றுக் கொண்டிருந்தது.
ஒரு அழகான சிங்கம் கூடை நிறைய
அதன் கனமான கம்பீரத்தை சேகரித்து
விற்றுக் கொண்டிருந்தது.
இப்படியாக யானை, புலி, கிளி, கரடி
என யாவும் அதனதன் உயிர் மூலங்கள்
அந்த சர்க்கஸ் கூண்டிற்குள் மனித அதிகாரத்தால் அடைக்கப்பட்டு காட்சிப் பொருளாக மாறிக் கொண்டிருந்தன...

No comments:

Post a Comment