வாழ்வின் அழகியல்
காலை எழுந்து குளித்து முடித்து எல்லா ஒழுக்குகளுடனும் இந்த உலகிற்கு
நம் முகத்தை அறிமுகம் செய்து வைத்துக் கொள்கிறோம்.
ஏமாற்றுபவர்களை ஏமாற்றி,
பாராட்டுபவர்களை பாராட்டி,
சிரிப்பவர்களிடம் சிரித்து,
அழுபவர்களிடம் அழுது,
வேண்டுபவர்களிடம் வேண்டி
என நமக்கான காரியத்தை முடித்து
தற்காலிக இறப்பு எனும் இரவிற்குள்
அடைந்து கொள்கிறோம்.
தூய அன்பு தினம் பூத்து உதிரும் மலரைப்
போல எப்போதும் இருக்கிறது.

No comments:
Post a Comment