Saturday, July 7, 2018

 
                      காட்சி உலகம்....



வேடிக்கை பார்ப்பவர்களின் உலகம்
விசித்திரங்களால் நிரம்பியது.
அவர்களின் மனம் முழுவதுமே அனுபவங்களால் நிரம்பிய அற்புதக் குவியல்.
விபத்து, அழுகை, சிரிப்பு, திருட்டு என அவர்கள் கண்முன்னே நடக்கும் அத்தனை சம்பவங்களும் அவர்களுக்கு வெறும் காட்சியே.
கடவுளுக்கும் அது பிடித்ததாலோ என்னவோ எப்போதும் இந்த உலகை
வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment