Friday, July 13, 2018


                எனக்கானவை....


பசியோடு இரவெல்லாம் பயணம்,
கை, கால்கள் உணர்விழந்த நிலை,
லட்சத்திற்கும் மேற்பட்ட தலைகளோடு
கலந்து விடுகிறது, எங்கள் தலைகளும்.
ஊர்ந்து, தடுக்கி, தவழ்ந்து, காத்திருந்து
இறுதியாய் கண்டடைந்தோம்
உனக்கான கடவுளையும், அதில்
எனக்கான கலையையும்.
நீ கடவுளிடம் யாசித்துக் கொள்,
நான் கலையை ரசித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment