Monday, August 13, 2018

காத்திருக்கும் மலர்கள்...



பேருந்து நிலையமாக இல்லாவிட்டாலும்
அது முக்கிய பேருந்து நிறுத்தம் தான்.
ரோட்டின் ஓரத்தில் அவர் சுடும் பச்சி, போண்டா சுற்றியுள்ள நாலு மைல்களுக்கு பிரசித்தம். சுவையின் நீர்வீழ்ச்சி.
ஐந்து ரூபாய்க்கு என்ன மாதிரி பொடிபசங்களுக்கு மூணு கட்டி கொடுப்பார். கடலைமாவு அப்பிய பனியனோடும், எண்ணையும், வேர்வையும் வழியும் உடலோடு தான் எப்போதும் இருப்பார்.
நேற்றைக்கு முன்தினம் படுத்த படுக்கையாக சவப்பெட்டிற்குள் வைத்திருந்தார்கள். இன்றைக்கு அவரின் கடையருகே அவர் சவ ஊர்வலத்தின் காய்ந்த பூக்கள் மட்டுமே அவருக்காக காத்திருந்தன.

No comments:

Post a Comment