Tuesday, August 14, 2018


                     நிரம்பும் வாழ்வு....


இந்த வாழ்வை மிகவும் கடினமாக்கிக் கொள்கிறோம். ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், உறவுகள், நட்புகள், சமாதானங்கள், சச்சரவுகள், கேலிகள், கொண்டாட்டங்கள் என கிடைக்கும் மொத்தத்தையும் போட்டு அதில் அடைத்துக் கொள்கிறோம்.
வாழ்வை வெற்றிடமாக வைத்துக் கொள்ள பலரும் ( நானும் தான் ) தவறி விட்டோம். அதனால் தானோ என்னவோ இங்கு நம்மால் காற்றைப் போல, பஞ்சைப் போல சுதந்திரமாக இருக்கவும், பறக்கவும் முடியாமல் தோற்று விடுகிறோம்.

No comments:

Post a Comment