Wednesday, April 11, 2018

 
                    மிதக்கும் சொற்கள்


பெரிதான பிரிவுகள் எப்போதும்
பெரிதான சண்டையில் உருவாவதில்லை.
அதன் இயக்கங்கள் மெளனத்தின் ஆழத்தை அடைந்துவிட எப்போதும் சொற்களை துணைக்கு அழைத்துக் கொண்டேயிருக்கும்.
வேண்டாத சொற்களால் வேண்டியவர்கள், வேண்டாதவர்களாக ஆகி விடுவதால் யாருமே தீண்டாத என் ஊனமான கோபமே எனக்கெப்போதும் போதும்.

No comments:

Post a Comment