Thursday, April 19, 2018

     
               தனிமையின் தடயஙகள்


உலகில் மிகவும் பாவப்பட்டவர்கள்,
நோயுண்டு படுத்த படுக்கையாகிப் போன வயதானவர்கள் தான்.
அவர்கள் பகல் நேரங்கள் எங்கோ
கண்ணுக்கு எட்டா தூரம் வரை சென்று கொண்டிருக்கும் ரயில் தண்டாவளத்தைப் போல் மிக நீண்டதாகவும்,
இரவு நேரங்கள் தனிமையிலும், நிராகரிப்பிலும், வலியிலும், ஆதரவற்றும், அழுகையோடும், புலம்பலோடும் கரைந்து கொண்டிருக்கும்.
அந்தச் சமயம் தான் உணர முடிகிறது, தனக்கான உலகின் எல்லா திசைகளும்
துண்டிக்கப்பட்டு விட்டதை.
           

No comments:

Post a Comment