Friday, April 13, 2018

 
                    சுதந்திரம் என்பது


உங்களுக்கான சுதந்திரம் என்னவென்று?
தாத்தாவிடம் கேட்டேன்,
எழுந்து நடமாடும் தெம்பிருந்தால்
போதும் என்றார்.
பாட்டியிடம் கேட்டேன்,
நோய் நொடியில்லாமல் இருந்தால்
போதும் என்றாள்.
அப்பா, அம்மா, அண்ணன், தங்கை எல்லாரிடமும் கேட்டேன்,
அவரவர் அவரவர் விரும்பியபடியே இருந்தால் போதும் என்றனர்.
இறுதியாய் ரோட்டில் நடந்து சென்ற சிறுமியிடம் கேட்டேன், அண்ணா லீவ் நாள்ல ஸ்பெசல் கிளாஸ் வெக்காம இருந்தா போதும் என்றாள்.
நமக்கான சுதந்திரம் இப்படித்தான் சுருங்கிக் கிடக்கிறது.

No comments:

Post a Comment