Sunday, April 15, 2018


                            உயிர் கணம்


வழக்கமான அதிகாலைப் பொழுது தான்
அதற்கென பிரத்யேகமாய் உருமாறிப் போன வாகனத்தில் மெளனம் கிழிக்கும் அலறல்களுடன் ஏற்றப்படுகிறது.
தலைகள் எண்ணப்பட்டு ஆங்காங்கே கடைகளின் கூண்டிற்குள் அடைக்கப்படுகிறது. மிகவும் இயல்பாய் வரும் ஒருவன் அதில் ஒன்றை பிடித்து கைகால்களை இறுக்கமாய் கட்டி ஒரு வினாடிக்கும் குறைவான தருணத்தில் கூறியமுனையில் சிறு கோடாய் அதன் கழுத்தில் கீற, அவ்வளவே ரத்தம் பீய்ச்சிட, அலறல் அதிற மெல்ல மெல்ல அந்த ஆட்டுக்குட்டியின் உயிர் உறைந்து காற்றில் கரைகிறது. அதன் கனவு, ஆசை, வாழ்வு என எல்லாவற்றையும் அதன் கழுத்தில் இருந்து வெளியேறும் ரத்தம் அழித்துக் கொண்டிருந்தது.

                        

No comments:

Post a Comment