Wednesday, April 25, 2018


               நேற்றின் நினைவுகள்


நீயே தான் அழைத்தாய் பேச வேண்டும் போல இருக்கிறது என்று,
பெரிய சந்தோசமோ, எதிர்பார்ப்போ எதுவுமே மனம் அடையவில்லை.
எந்த ஒத்திகையும் இல்லை,
நீ பேசுவதை நான் கேட்க வேண்டும் அவ்வளவே.
மனம் என்ன சமாதானம் அடைந்தாலும் ஓய்ந்த பாடில்லை, யாருமே வாசிக்காத கவிதையின் காகிதத்தைப் போல நமக்கான இறந்தகாலம் காற்றில் பறந்து கொண்டிருந்தது.

No comments:

Post a Comment