Tuesday, June 26, 2018


                       மானுட வாழ்வு



யாரோ ஒருவருக்காக,
மிகவும் தன் சுயநலத்திற்காக,
சில தியாகங்களுக்காக,
நிறைய நேசத்திற்காக,
கொஞ்சம் பொறாமைக்காக,
ஆழமான வெறுப்பிற்காக,
அளவற்ற ஆசைக்காக,
வெடிக்கும் கோபத்திற்காக,
இன்னும் பலப்பலவாறு
வாழ்ந்து தான் கொண்டிருக்கிறோம்,
இந்த ஒற்றை வாழ்வை.

No comments:

Post a Comment