Saturday, June 30, 2018


                    இவ்வாழ்க்கை...



 ஓவியன் வானத்தை தன் நினைவின்
வர்ணத்தால் வரைகிறான்,
அதை இது நிஜமல்ல, பொய் என்கிறீர்கள்.
கவிஞன் கவிதையை தன் கற்பனையின்
கலையால் காவியமாக்குகிறான்,
அதை இது நிஜமல்ல, பொய் என்கிறீர்கள்.
நீங்கள் விரும்பாத, பழகாத, பிடிக்காத, பிரியாத, வேண்டாத எல்லாவற்றையும்
இது நிஜமல்ல, பொய் என்கிறீர்கள்
போலியான இந்த வாழ்வை
வாழ்ந்து கொண்டு.......

No comments:

Post a Comment