Wednesday, February 14, 2018


         காலை எழுந்தவுடன் காதல்...


இளமையின் ஒட்டுமொத்த அன்பும்
அடைக்கலம் ஆவது காதலெனும் கருவறைக்குள் தான்.
கவிதையோ, கல்லறையோ அன்பின்
பேரடையாளங்கள் எல்லாம் காதலின்
பெயரால் தான் இங்கு அடையாளப்படுத்தப்படுகின்றன.
வாழ்தலின் ஒட்டுமொத்த பரிமாணங்களும், அடர்த்தியும் காதலின் வழி தான் கற்பிக்கப்படுகின்றன.
எப்போதும் பெருமழையாய் பெய்து கொண்டிருக்கும் காதலில் நனைவதற்கு
நாம் தான் அச்சமும், வெட்கமும் படுகிறோம்.

No comments:

Post a Comment