Tuesday, February 6, 2018


             கடவுளாக மாறிய காந்தி


யாரோ கற்றுக் கொடுத்த வாழ்வை
நாமும் மனப்பாடம் செய்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அதன் இயல்பின் ருசியை மறந்தும், மறைத்தும் விட்டு களைத்துச் சேர்த்த பணத்தில் ஆசுவாசம் அடைந்து கொள்கிறோம்.
இங்கே ஒருவனை அழித்து தான் ஒருவன் வாழ வேண்டும் எனும் தவறான இலக்கணத்தை சரியாய், விரைவாய் கற்றுக் கொண்டோம்.
இத்தனைக்குப் பிறகும் நம் பாக்கெட்டிற்குள் நுழையும் பணம் முழுதிலும் இருக்கும் காந்தி, கடவுளைப் போல புன்னகைத்தபடியே தான் இருக்கிறார்.

No comments:

Post a Comment