Sunday, February 4, 2018

மெளனமே கேள்வியாய்...


எந்தக் கைகள் ஏந்திக் கொள்ளும்
இந்த மெளனத்தை?
எந்தக் கண்கள் எதிர்நோக்கும்
இந்த இயலாமையை?
எந்தக் கால்கள் கடந்து செல்லும்
இந்த பரிதவிப்பை?
எந்தக் காலங்களில் அமர வைக்கலாம்
இந்த கணங்களை?
எந்த பதில்களில் சிறை பிடிக்கலாம்
இந்தக் கேள்விகளை?

No comments:

Post a Comment