Monday, February 26, 2018


               பிரியங்களில் வாழ்தல்


பூமியில் இருக்கும் சொர்க்கமாக இதுபோன்று இருக்கும் எவ்விடத்தையும் யோசிக்காமல் குறிப்பிடுவேன்.
வாசிப்பும், குழந்தைகளோடு பொழுதைக் கழிப்பதும் நாவிற்கு அடியில் இருக்கும் பனங்கற்கண்டைப் போல எப்போதும் தித்திக்கும்.
உண்மையில் இந்த உலகம் முழுதும் எழுத்துக்களாலும், எண்களாலுமே
நிரம்பி வழிகிறது.
உயிரை அர்த்தமுள்ள அனுபவமாக, கவிதையாக, உணர்வாக, மாற்றவல்லது
புத்தகம் சுமக்கும் எழுத்துக்கள் மட்டுமே.

No comments:

Post a Comment