Sunday, February 18, 2018


           கடவுளும் இன்னும் பலரும்


நாம் யாருக்கும் அறிமுகமில்லாத
ஒருவர் வந்தார்,
கணக்கற்ற உயிர்களை இந்த உலகில்
தோற்றுவித்துக் கொண்டேயிருந்தார்
பின்பு எல்லோருக்கும் அறிமுகமானார்.
நாம் யாருக்கும் அறிமுகமில்லாத
இன்னொருவர் வந்தார்,
கணக்கற்ற உயிர்களை இந்த உலகில்
அழித்துக் கொண்டேயிருந்தார்
பின்பு எல்லோருக்கும் அறிமுகமானார்.
இடையில் புகுந்த ஒருவர் பிறக்கும்
சில உயிர்களை பிறவிக் குறைபாடாக
உருவாக்கிக் கொண்டேயிருந்தார்.
கடவுளும், அறிவியலும், நாமும் இதை
வேடிக்கை பார்த்தவாறு இந்த வாழ்வை கடந்து கொண்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment