Thursday, February 22, 2018


                அன்பின் அடையாளம்

சக உயிர்களிடம் சிறுவர்கள்
கொள்ளும் அன்பானது,
கடவுளின் உயிர்ப்பை விட
அழகானது, அற்புதமானது.
அவர்கள் நீட்டும் நேசத்தின் கரங்கள்
உலகின் எல்லா திசைகளிலும்
காற்றைப் போல பரவியிருக்கின்றன.
அன்பை, சகோதரத்துவத்தை, விட்டுக் கொடுத்தலை, கருணையை என உயிர் உணர்வுகள் யாவற்றையும் போதிக்கும் சிறுவர்கள் உண்மையில் கடவுளின், இயற்கையின் பிரதிநிதிகள் தான்.

No comments:

Post a Comment