Tuesday, February 20, 2018


                     பிடிக்கும் மரணம்


பெரும் கூட்டத்திற்குள் புதைந்திருக்கும்
தனிமை பிடித்திருக்கிறது,
ஓடும் நதியலையில் மெல்லிசையாய்
வருடும் சப்தம் பிடித்திருக்கிறது,
நகரத்தை சுற்றிக் கொண்டிருக்கும்
வியாபாரக் குரல் பிடித்திருக்கிறது,
பதினாறைப் பெறும் பெண்ணின்
தாய்மை பிடித்திருக்கிறது,
அறிமுகமில்லாத இடத்தில் கிடைக்கும்
ஒருபிடி சோறு பிடித்திருக்கிறது.
சட்டென முடிந்துவிடும் வள்ளுவனின் திருக்குறளைப் போன்ற
மரணம் பிடித்திருக்கிறது.

No comments:

Post a Comment