Wednesday, February 28, 2018

 
               மனிதம் தேடும் கடவுள்


கைகள் நீட்டியவுடன் கருணையை
யார் பரிசளிக்கிறார்களோ?!
பார்வை பட்டவுடன் அன்பை அள்ளி
யார் தருகிறார்களோ?!
மனதுக்குள் புகுந்து மனிதத்தை
யார் விதைக்கிறார்களோ?!
கண்ணிர் சிந்தும் கண்களை கண்டதும்
யார் துடைக்கிறார்களோ?!
நோயின் தருணங்களில் நேசத்தை
யார் அளிக்கிறார்களோ?!
அவர்களே நமக்கான
வாழ்வின் நீட்சியும்,
கடவுளின் இன்றைய பிம்பங்களும்.

No comments:

Post a Comment