Friday, February 2, 2018


            அந்தரத்தில் சில கணங்கள்


கைகள் கழுவாமல் அவள் என்றைக்கும்
சாப்பிட்டதாக நினைவில்லை,
அந்த நொடிக்கான அவள் மெனக்கெடலில்
உடன் சாப்பிட அமருபவன் பசியில் இறப்பதற்க்கான சாத்தியமே அதிகம்.
அவள் தேக்கரண்டியில் படும் சாதம் இதழ்தொடாமல் நாவிற்குள் சென்றுவிடும்.
அவள் சாப்பிடத் தொடங்குவதற்கான நேரமும், அவன் சாப்பிட்டு முடித்தற்கான நேரமும் கடிகாரத்தின் கால இடைவெளியில் தொங்கிக் கொண்டிருந்தது.

No comments:

Post a Comment