Thursday, March 1, 2018


                        நகரம் என்பது


நகரம் நம் கவலைகளையும், அழுக்குகளையும், பாசாங்கையும்,
சுமக்கும் மெளனத்தின் பிம்பம்.
ஒவ்வொரு நகரத்திற்கும் இயல்பிலேயே
தனித்துவமான ஒரு வாசனை இருக்கிறது.
நம் இதயத்துடிப்பைப் போல அது எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது.
அனுபவத்தின் அழியா சாட்சியாக,
நிராசைகளின் நீரூற்றாக,
துரோகத்தின் தூணாக,
வாழ்தலின் வழிகாட்டியாக,
வீழ்தலின் விஷ்வரூபமாக
என நகரம் நம் ஆயுளுக்குமான ஆசான்.

No comments:

Post a Comment