Saturday, March 17, 2018


                      உயிரின் உருவம்


 நிழலின் கருணை எப்போதும் வெளிச்சத்திற்கு கிடைப்பதில்லை.
எக்காலமும் வெளிச்சத்தின் கைகள் பற்றி அலையும் நிழல் , ஒரு நாயின் நன்றியுணர்வை நினைவூட்டுகிறது.
நிழலின் கரும்பரப்பு , சுற்றும் பூமியில்
பரவும் நதியலை.
வெளிச்சம் இறந்தவுடன் தானும் சட்டென
இறந்து விடுவதால் தான் நமக்கு நிழலை
அவ்வளவு பிடிக்கிறது போல.

No comments:

Post a Comment