Saturday, March 3, 2018


                    ஏழ்மையின் ருசி


ஏழ்மையின் அழகியலே எளிமை தான்.
பல ஏழைக்குடும்பங்கள் சிறிய வீட்டில்
கொஞ்சமாய், அழகாய், ஆனந்தமாய், ஆரோக்யமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் வாழ்வியலின் ஆணிவேராக இருப்பவை ஒற்றுமையும், சகிப்புத்தன்மையும் தான்.
அவர்கள் எதிர்காலம் என்பதே அடுத்தவேளை பசிக்கும், இரவு உறக்கத்திற்குமான தேடலிலேயே வாழ்வு மொத்தமும் கரைந்து விடுகிறது.
ஆதலால் தான் கடவுளின் ஆன்மாவாக ஏழைகள் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment