Monday, March 19, 2018


          நினைவில் சில குறிப்புகள்


 "மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்."
நம் தந்தை வள்ளுவன் வார்த்தைகள்
நினைவுகளில் வட்டமடிக்கிறது.
தாத்தாக்கள், பாட்டிகள்,
அப்பா, அம்மா,
பெரியப்பா, பெரியம்மா,
மாமா, அத்தை,
அண்ணா, அக்காக்கள்,
நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும்
உறவினர்கள் என அனைவரின் பாதங்களிலும் உங்கள் ஆசி வேண்டி என் வணக்கங்கள். 🙏👨‍🎓🙏


என்னடா இவ்ளோ பெரிய பில்டப்புனு யோசிக்கிறீங்களா(???!!!)
அதொன்னுமில்லீங்க அண்ணன் UKG -ல இருந்து 1'st Std போகப்போறேன்.
அதுக்குத்தான் நம்ம பாசக்கார உடன்பிறப்புக இந்த கவுன மாட்டி விட்டுட்டாங்க. 😆😉😆
                      🙏🙏👨‍🎓👨‍🎓👨‍🎓🙏🙏


தற்போது வளரும் பல பள்ளிகள் இதுபோன்று சிறுவர்களுக்கு பட்டமளிப்பு கொடுத்து அதை விழாவாக சிறப்பாக, சந்தோசமாக நடத்துகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை அவர்கள் நம் குழந்தைகளுக்கு கொடுக்கும் இதுபோன்ற பாராட்டுகளும், பரிசுகளும் நாம் நம் குழந்தைகளின் கல்வித்தரம் உயரும் போது அவர்களை எப்படி ஊக்கப்படுத்த, அணுக வேண்டும் என்பதை பாடமாக பெற்றோர்களாகிய நாம் படித்து, புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.


இதுபோன்ற சின்ன சின்ன விசயங்களில் கூட பெற்றோர்களுக்கும், படிக்கும் பிள்ளைகளுக்கும் பெரிதான பெருமையையும், சந்தோசத்தையும் ஏற்படுத்தித் தரும் பள்ளி நிர்வாகத்திற்கு என் அன்பு கலந்த நன்றிகள் பல. 🙏🙏🙏

No comments:

Post a Comment