Sunday, March 18, 2018


              கோபத்தின் கணங்கள்

 கோபங்கள் எப்போதும் இடைவிடாது
சொற்களால் நிரம்பி பிறகு ஆழ்கடலின்
அடியாழம் போல மெளனத்தால்
நிரம்பி வழிகிறது.
அது திரும்ப திரும்ப நமது இயலாமையின்
சொற்களையே அங்குமிங்கும் சுமந்து
அலைந்து திரிகிறது.
பெருங்கோபத்தின் அடர்கருப்பு நிறம்
நம் உணர்வுகளின், உறவுகளின், தீர்மானங்களின், தெளிவின் என எல்லா வாசல்களையும் மூடி விடுவதாலோ என்னமோ நம்மால் கோபத்தை மட்டும் அடக்கவே முடிவதில்லை.

No comments:

Post a Comment