Thursday, January 11, 2018

தமிழின் அடையாளம்


அதிகம் பேசாமல் அளவாய் எழுதிய ஒட்டுமொத்த தமிழ் எழுத்தின் முதல் அடையாளம் வள்ளுவன்.
நேற்றைய, இன்றைய, நாளைய என
என்நாளுக்குமான வாழ்விற்க்கான வார்த்தைகள் இவன் திருக்குறள் எனும்
டைரிக் குறிப்பில் அடங்கியிருக்கிறது.
நாத்திகனும் வணங்கும் தெய்வமாக இவணும், இவன் எழுத்துக்களும் என்றைக்கும் உலகின் மடியிலிருக்கும்.


              அன்பை யாசிப்பவன்...


புறந்தள்ளும் போதும்,
விமர்சிக்கப்படும் போதும்,
ஏளனப்படுத்தப்படும் போதும்,
நிராகரிக்கப்படும் போதும்,
புரிந்து கொள்ளப்படாத போதும்,
கவனிக்கப்படாத போதும்
நிழல் போல தொடரும் அன்பு எளிதில்
கருணைக் கொலை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment