Friday, January 12, 2018

                   
                         இவ்வாழ்வு


பெரும் கோபத்திற்கு பிறகான
சமயத்தில் மனம் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வது,
பெரும் ஆனந்தத்திற்கு பிறகான சமயத்தில் நம் கண்களின் ஓரத்தில்
எட்டிப் பார்க்கும் கண்ணீர் துளி,
பெரும் சமாதானத்திற்கு பிறகான சமயத்தில் இயல்பை மீறி இதயம்
இடம் மாறிக் கொள்வது என
வாழ்தலின் ருசி இந்த உணர்வுகளில்
தான் புதைந்திருக்கிறது.

          பெண் எனப்படுபவள்


ஒரு வினாடியில் ஓராயிரம் கோடி திரைக்கதைகளை ஒளிபரப்பும் இந்த உலகம் உண்மையில் நாமெல்லாம் நடித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய நாடகமேடை தான்.
அவரவர் கதாப்பாத்திரங்களை கச்சிதமாய் நடித்து முடிக்க போராடுகிறோம்.
திரைப்படத்தில் எப்படியோ ஆனால் நிஜத்தில் ஒரு பெண் தான் நம் இயக்குனர், தயாரிப்பாளர் என எல்லாம்.

கடைசி அத்தியாயம்


வாழ்வின் இறுதி அத்தியாயங்களில் காற்றில் பறக்கும் இலவம்பஞ்சைப் போல் மிதந்து கொண்டிருக்கும் பருவம் தான் முதுமைப் பருவம்.
இந்த உலகையும், உயிரினங்களையும் நேசிக்கும் இறுதி வாய்ப்பைத் தான் இயற்க்கை அளிக்கிறது.
முதியவர்கள் வெறும் முதியவர்கள் மட்டுமல்ல, அவர்கள் நடமாடும் அனுபவப் புதையல். இன்னுமும் அவர்களை வாழ்வின் நெருக்கடியில் சிக்கவைக்காமல் பாதுகாப்பது நம் கடமை.

No comments:

Post a Comment