Monday, January 29, 2018

                 
                     இப்படிக்கு, எழுத்து
                 

எதற்காக என் எழுத்து?
நான் எழுதும் மூலப்பொருளுக்கான
ஒரு சதவிகிதத்தைக் கூட இந்த எழுத்தால்
எனக்கு தர இயலாது. பிறகு எதற்காக
இந்த எழுத்து? என் எழுத்து?
இருந்தும் தேவையாயிருக்கிறது,
சில கனவுகளை வரையறுக்க,
சில நிபந்தனைகளை மேற்கொள்ள,
சில ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்ள,
சில காயங்களை சரிசெய்து கொள்ள,
நான் இறந்த பின்பும் உயிர்வாழ
என என் எழுத்து எனக்கு தேவையாய் இருக்கிறது.

No comments:

Post a Comment