Thursday, January 18, 2018


                   பிரியத்தின் ஒரு துளி


அவள் கோலங்கள் அவளைப் போல் அவ்வளவு அற்புதமானது.
கோலக் கோட்டிற்கு மேகக்கூட்டங்களையும்,
புள்ளிகளுக்கு
நட்சத்திரங்களையும்
பறித்துத்தான் அவள் வழக்கமாய்
கோலமிடுவாள்.
மழையின் சப்தம்,
பிரசவத்தாயின் அழறல்,
புல்லாங்குழலின் ஓசை,
பாலைவன கானல் காற்று
போல அவ்வளவு துல்லியமாய்
இருக்கும் அவள் கோலங்களும்.
நேற்று அவள் வரைந்த அந்த கடவுள்
உருவ கோலம் இன்று அவளோடு மருத்துவமனையில் உடனிருக்கிறது.
       -நினைவில் உமா பின்னி 🙏😌🙏

No comments:

Post a Comment