Friday, January 26, 2018

            இன்றைய நாளைப் போல
                அன்றொரு நாளில்...

சில வருடங்களுக்கு முன்னர் இன்றைய நாளில் தான் நம் குடும்பத்தில் நிகழ்ந்த மிகப்பெரும் முதல் விழாவும், திருவிழாவும் ஆகும். திருமணம் எனும் புது உறவின் அடர்த்தியை உணர்ந்த தினம். உறவுமுறை அறிந்திடாத உறவினர்கள், அறிமுகமில்லாத ஆயிரம் முகங்கள், பொதுக்கூட்டத்திற்கு கூட வராத மந்திரிகள், MLAக்கள் என மண்டபமே அதிரிபுதிரியானது. அங்கிருந்த மொத்த கூட்டமும் தேவராசன்-கெளசல்யா எனும் தம்பதியின் ஒற்றை பரிமாணத்திற்க்கான கூட்டம். ஹாய் ஹீய் என்று பந்தியில் முதல் ஆளாக பரிமாற நின்று கொண்டிருந்த நானெல்லாம் கூட்டம் வரிசை கட்டியவுடன் சாம்பார் வாளியோடு ஓர் ஓரமாக ஒதுங்கி விட்டேன். முதலில் மண்டபத்தோடு இருந்த கூட்டம் பிறகு வாசல், வராண்டா இறுதியில் சாலை வரை சென்று விட்டது. இன்று எவ்வளவோ விழாக்களுக்கு எவ்வளவோ கூட்டம் சேர்ந்தாலும் உண்மையில் அப்போது ஒரு கல்யாணத்திற்கு அவ்வளவு கூட்டத்தை முதல் முறையாக அங்கிருந்த மொத்த கூட்டமும் பார்த்தது. தென்படும் எல்லார் கண்களிலும் பரபரப்பும், ஆனந்தமும். இன்னும் இன்னும் எத்தனை எத்தனை நினைவுகள் இன்றைய நாளைப் போல ஒரு தினத்தில் தான் அன்றொரு நாள் நடந்தது. வாழ்க்கையை எதற்காக அடுத்தவர்களுக்காக கொஞ்சம் வாழ வேண்டும் என்பதை அங்கு வந்த கூட்டமும், வாழ்த்திய மனங்களும் இன்றுவரை ஒரு இசையாக மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. மறக்காத நினைவின் சிறகுகள் இப்படித்தான் வானம் வரை பறக்கும் போல. அடிக்கரும்பைப் போல தித்திக்கும் இந்த நினைவுகளின் வாழ்த்துக்கு உரியவர்களான மகிக்கும், மாமாவிற்கும் ஒட்டுமொத்த "Our Family "-ன் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment